×

காதலன் வேறு பெண்ணை நேசித்ததால் நர்சிங் மாணவி தற்கொலை: தாம்பரம் அருகே பரிதாபம்

தாம்பரம், பிப்.22: தாம்பரம் அருகே காதலன் வேறு பெண்ணை நேசிப்பதை அறிந்த, நர்சிங் மாணவி மன வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், கோதாவரி தெருவை சேர்ந்தவர் மாலினி. இவரது மகள் கவிதா (16, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த கவிதா, தன்னுடன் படிக்கும் சக மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில், சமீப காலமாக கவிதாவுடன் பேசுவதை காதலன் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கவிதா விசாரித்தபோது, காதலன் வேறொரு பெண்ணை காதலிப்பது தெரிந்துள்ளது. இதுபற்றி, காதலிடன் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனவேதனையில் இருந்த கவிதா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்து, கதறி அழுதனர்.தகவலறிந்த சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tambaram ,
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!