×

(வேலூர்) வள்ளிமலையில் தேர் சீரமைக்கும் பணி தொடக்கம் 24ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம்

பொன்னை, பிப்.22: வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 24ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறுவதையொட்டி தேர் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொன்னை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் வருடந்தோறும் 15 நாட்கள் கொண்ட பிரமோற்சவம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு வருகிற 24ம் தேதி(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடைபெற உள்ளது. முக்கிய விழாவான மார்ச் மாதம் 2ம் தேதி முதல் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று தேர் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரின் சக்கரங்களுக்கு கிரீஸ் ஆயில் உள்ளிட்டவை கொண்டு பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுகிறது. மேலும், பிரமோற்சவத்தை முன்னிட்டு நடைபெற உள்ள பல்வேறு முன்னேற்பாடுகளை உபயதாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Vellore ,pramotsavam ,Vallimalai ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...