×

உலக தாய்மொழி தினத்தையொட்டி நெல்லையப்பர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

நெல்லை,பிப்.22: உலக தாய்மொழி தினத்தையொட்டி நெல்லையப்பர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உலக தாய்மொழி தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நெல்லையப்பர் கோயிலில் அமைந்துள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பு திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக்குழு ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமையில் திருவாசக முற்றோதுதல் நடந்தது. இதில் பல்வேறு திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக்குழுவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvasakam ,Nellayapar ,World Mother Language Day ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் டிஎம்பி...