×

விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம், பிப். 22: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்து தற்போது விசாரணை அதிகாரிகளிடம் மட்டுமே விசாரணை நடத்த உள்ளதால் இந்த வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே நேற்று வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வந்தது. குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வராதது குறித்து தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகாததால் வழக்கு விசாரணையை 23ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags : Villupuram ,Special DGP ,
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு