தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள 60 வீடுகளை இடிக்க நோட்டீஸ்

குன்னூர், பிப்.22: குன்னூர்- ஊட்டி இடையே வெலிங்டன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள 60 வீடுகளை ஒரு வாரத்திற்குள்  இடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

 நீலகிரி மாவட்டம் குன்னூர் முதல் ஊட்டி வரை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குன்னூர் மலைப்பாதையில்  சாலையின் இரு புறமும் மண் மற்றும் ராட்சத பாறைகள் அகற்றி விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் தற்போது குன்னூர் முதல் ஊட்டி வரை சாலையை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வெலிங்டன் கடந்த  நூறு ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சாலையை விரிவாக்க செய்வதற்கு ஆக்ரமிப்பில் இருந்துவரும் 60க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஒரு வாரத்திற்குள் தாங்களாகவே இடிக்கும் படியும் தவறும் பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலையை துறையினர் இடித்து அதற்கான தொகையை வசூல் செய்ய உள்ளதாக நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: