குன்னூர், பிப்.22: குன்னூர்- ஊட்டி இடையே வெலிங்டன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள 60 வீடுகளை ஒரு வாரத்திற்குள் இடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் முதல் ஊட்டி வரை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குன்னூர் மலைப்பாதையில் சாலையின் இரு புறமும் மண் மற்றும் ராட்சத பாறைகள் அகற்றி விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் தற்போது குன்னூர் முதல் ஊட்டி வரை சாலையை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.