×

அனைத்து கூட்டங்களிலும் சிறுதானிய பால்

மதுரை: மதுரை மாவட்டம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறுதானிய பொருட்களான கம்பு, கேழ்வரகு, குதிரைவாளி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள் சேர்ந்த பால் நேற்று கூட்டத்தில் கலெக்டர் அனீஷ் சேகர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது. மாவட்ட வேளாண் துறை இயக்குநர் விவேகானந்தன் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு சர்வதேச சிறு தானிய ஆண்டாக ஐநா சபை அறிவித்திருப்பதால் இந்த ஆண்டு வேளாண் துறை சர்பாக நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் சிறு தானிய பால் கொடுக்கப்படும். இதேபோல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் கொடுக்கப்படும்.’ என்றார்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...