திருச்சி: திருச்சியில் தனியார் வங்கியில் ரூ.10 நாணயம் வாங்க மறுத்ததால் டிரைவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி உறையூரில் தனியார் வங்கி உள்ளது. இங்கு உறையூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் ராஜேந்திரன்(62) தனது வங்கி கணக்கில் ரூ.10ஆயிரம் செலுத்த முழுவதும் பத்து ரூபாய் நாணயங்களை எடுத்து வந்தார். அப்போது வங்கியில் ரூ.1000த்துக்கான பத்து ரூபாய் நாணயங்களை மட்டும் வாங்கிக்கொண்டு மீதியை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ராஜேந்திரன் வங்கி முன்பு பத்து ரூபாய் நாணயங்களை தட்டில் கொட்டி வைத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.