×

2 நாட்டு துப்பாக்கி பறிமுதல் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி,பிப்.22: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் கிளை தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் கருணாநிதி சிறப்புரையாற்றினார், அரசு போக்குவரத்து கழகங்களில் தேவையான அளவுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிப்பதை கைவிட வேண்டும்.புதிய பணியிடங்களில் ஒப்பந்த முறை அரசாணையை ரத்து செய்து நிரந்தர பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் சிஐடியு மண்டல தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags : CITU ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு