×

இன்று உலக சிந்தனை தினம் மன்னார்குடியில் தற்காலிக பேருந்து நிலையம்

மன்னார்குடி: மன்னார்குடியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ நேற்று பேருந்தை இயக்கி தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பேருந்து நிலையம் பழுதடைந்த நிலையில், ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக சுமார் ரூ.29.76 கோடி ஒதுக்கப்பட்டு பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மன்னார்குடி தேரடி பகுதியில் சுமார் ரூ.85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர், மாநில திட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர திமுக செயலாளர் வீரா கணேசன், நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் குணசேகரன், துணைத்தலைவர் கைலாசம், ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : World ,Thinking ,Mannarkudi ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே உலக பாரம்பரிய தின ஓவியப்போட்டி