×

ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம் கரைகள் சீரமைப்பு திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டில் வாழைத்தார் பழுக்க ரசாயனம் தெளிப்பு

திருக்காட்டுப்பள்ளி,பிப். 22: திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டில் வாழைத்தார் பழுக்க ரசாயனம் தெளிக்கப்படுகிறது. இதனால் வாழைப்பழம் வாங்க பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் காய், கனி, விற்பனை செய்ய தனியாக ஒரு மார்க்கெட்டும், வாழைத்தார் விற்பனை செய்ய தனியாக ஒரு மார்க்கெட்டும் உள்ளது. இந்த மார்க்கெட்டில் நவீன முறையில் புதிய கடைகள் கட்டுவதற்கும் வாழைத்தார்கள் பழுக்க வைக்க தனியாக கொடாப்பு கட்டுவதற்கும் அங்கிருந்த பழைய கடைகளை இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாழைத்தார் விற்பனை செய்ய காய்கனி மார்க்கெட் அருகில் ஏலக்கடைகள் இயங்கி வருகிறது. இந்த காய், கனி மார்க்கெட்டிற்கு உருளைகிழங்கு, முட்டை கோஸ், பீட்ரூட், கேரட், மற்றும் பல்வேறு காய், கனிகளை திருச்சி மார்க்கெட்டிலிருந்து தினமும் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். மற்ற காய், கனிகள் மற்றும் வாழைத்தார் போன்ற வகைகளை சுற்றுவட்டார பகுதியில் விளையும் விவசாய நிலத்திலிருந்து விவசாயிகள் கொண்டுவந்து இங்கு வந்து தான் விற்பனை செய்து வருகின்றனர்.வாழைத்தார்களையும் விற்பனை செய்து வருகின்றனர். இதில் அனைவரும் வாழைபழத்தை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சிறுவர்,சிறுமியர், பெரியவர்கள் என பாகுபாடின்றி வாழைப்பழத்தை சாப்பிட்டு வருகின்றனர்.


அது மட்டுமல்லாமல் பூஜைக்கும், திருமணம் போன்ற வைபவங்களுக்கும் வாழைபழம் வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், சமுதாயத்தில் தினம், தினம், வாழைப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் வாழைபழம் இயற்கையாக பழுத்தால், இதன் சுவை தனி. ஆனால் திருக்காட்டுப்பள்ளி வாழை தார் மார்க்கெட்டில் விரைவில் பழுக்க வே ண்டும் என்றும் வாழைத்தார் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் வெளிப்படையாகவே பொதுமக்களின் பார்வையிலேயே ரசாயன மருந்து கலந்த கலவையை தெளித்து வருகின்றனர். ரசாயன கலவை மருந்து கலந்த வாழைப்பழத்தை உண்பவர்களுக்கு கேன்சர், குடல் சம்மந்தப்பட்ட வியாதிகள், கண்பார்வை இழக்கும் நிலை போன்ற உடலில் பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். இந்த மருந்து கலந்த வாழைப் பழத்தை எப்படி சாப்பிடுவது என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இது போன்ற கொடிய நோய்கள் பரவி மக்கள் பாதிக்காமல் இருக்க சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வாழைப்பழம் வாங்க பொதுமக்கள் அச்சம்
எந்தெந்த இடங்களில் நீரோடும் பாதையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளுக்கு தண்ணீர் முற்றிலும் வடிந்து தரை காய்ந்தவுடன் அந்த பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.


Tags : Thirukkattupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு