×

உலக சிக்கன நாள் விழிப்புணர்வு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

நாமக்கல்: நாமக்கல்லில், உலக சிக்கன நாளையொட்டி, நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசு வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் உலக சிக்கன நாள் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கலெக்டர் ஸ்ரேயா சிங், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும், மாவட்ட அளவில் மகளிர் முகவர் மற்றும் நிலை முகவர்களில், சிறுசேமிப்பு முதலீட்டில், மாவட்ட அளவில் சிறந்து விளங்கியவர்களுக்கு கேடயங்கள், வட்டார அளவில் மற்றும் நகராட்சி அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்த முகவர்களுக்கு சிறப்பு பரிசுகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : World Thrift Day ,
× RELATED உலக சிக்கன நாள் இன்றைய சேமிப்பு, நாளைய...