×

நாகப்பட்டினத்தில் 27ம்தேதி இபிஎப் குறைதீர் கூட்டம் திருச்சி மண்டல முதன்மை ஆணையர் தகவல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் வரும் 27ம் தேதி இபிஎப் குறைதீர் கூட்டம் நடைபெறும் என திருச்சி மண்டல இபிஎப் முதன்மை ஆணையர் முருகவேல் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இபிஎப் (வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) சார்பில் \”நிதி ஆப்கே நிகத்\” என்ற பெயரில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் வரும் 27ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் இபிஎப் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. செட்டில்மெண்ட் பெறுவது, வெவ்வேறு இபிஎப் கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது, இபிஎப் சந்தாதாரர்கள் தங்களது யுஏஎன் கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தங்களது சுய விபரங்களை தங்களது யுஏஎன் கணக்கில் இணைத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய இந்த முகாமிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்களது பெயர் மாற்றக் கோரிக்கை உட்பட அனைத்து கோரிக்கைகளையும் தகுந்த ஆதாரங்களுடன், எழுத்துப்பூர்வமாக முகாமில் சமர்ப்பிக்கலாம். இபிஎப் சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், முகவர்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் டிரஸ்ட்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : EPF ,Nagapattinam ,Trichy Zone ,Commissioner ,
× RELATED பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் போலீசுக்கு...