×

ஆதமங்கலம் கிராமத்தில் அய்யனார்கோயிலில் 1008 குங்கும அர்ச்சனை

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த குட்டியப்ப அய்யனார்கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு 1008 குங்கும அர்ச்சனை நடைபெற்றது. கனமழையால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து விவசாயிகள் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். முன்னதாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 96 வகையான ஹோம பொருட்கள், 9 வகையான நவதாணிங்கள், பழவகைகள், பட்டு உள்ளிட்டன கொண்டு மகா யாகமும் தொடர்ந்து சிறப்பு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. மகா தீபாராதனைக்கு செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Aiyanarkoil ,Adamangalam ,
× RELATED ஆதமங்கலம் கிராமத்தில் எருது விடும்...