×

வேதாரண்யத்தில் கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாரண்யம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு நாகை, திருவாரூர் மாவட்ட குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடித்தார்கள் விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், வர்த்தக சங்க மாநில துணை தலைவர் தென்னரசு, அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் காசி அருள் ஒளி, செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள், கோயில் நிலத்தில் குடியிருப்போர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோயில் நிலத்தில் குடியிருப்பு பட்டா வழங்க வேண்டும். கோயில் இடங்களை பத்திர பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். கோயில் இடத்தில் குடியிருப்பவர்களை வாடகைதாரராக மாற்ற கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்பு ஆர்டிஓ ஜெயராஜ்பவுலிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.

Tags : Vedaranayam ,
× RELATED வேதாரண்யத்தில் தேசிய வாழைப்பழம் தினம் கொண்டாட்டம்