வேதாரண்யம், பிப்.21: வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு கருமாரியம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி சிவராத்திரி, அமாவாசை மற்றும் யாகபூஜைகள் நடந்தது. யாகத்தில் விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்யர், ராமர், நவக்கிரஹக பரிகார பூஜைகளுடன் வேதவல்லி மற்றும் வாராகி அம்மனுக்கு உலக ஷேமம் வேண்டி பல்வேறு திரவியங்கள், நிகும்பல (மிளகாய்) வேள்வியுடன் பூர்ணாஹுதியும், தீபாரதனையும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.