×

குடும்ப பிரச்னை கிணற்றில் குதித்து கொத்தனார் தற்கொலை

அரவக்குறிச்சி, பிப்.21: அரவக்குறிச்சி தாலுகா, சாந்தப்பாடியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரவிச்சந்திரன் (30). கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இவருக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மனைவியுடன் தினமும் குடித்துவிட்டு பிரச்சினை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று தனது மனைவி காவியா உடன் குடித்துவிட்டு பிரசனை செய் கோபித்துக் கொண்டு சாந்தப்பாடி ஊர் கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் 40 அடி தண்ணீர் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினர் ரவிச்சந்திரனை கிணற்றிலிருந்து பிணமாக மீட்டனர். அரவக்குறிச்சி போலீசார் சடலத்தை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : mason ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை