×

பண்ணாரி சோதனை சாவடியில் சிறுத்தை நடமாட்டம்வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

சத்தியமங்கலம், பிப்.21: பண்ணாரி சோதனை சாவடியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள், வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என  வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.இந்த நிலையில் நேற்று காலை சாலையோரத்தில் சிறுத்தை நடமாடியது.

இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் உலாவிய சிறுத்தை பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.  சிறுத்தையை சில வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்து சமூக வளைத்தில் வெளியிட்டனர். அது வைராகி வருகிறது. இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துள்ளது.

Tags : Forest ,Pannari ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...