×

நகர்மன்ற கூட்டத்தில் தகவல் தலைஞாயிறு பேரூராட்சி கூட்டம்

வேதாரண்யம், அக்.1: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி அவை கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் குகன் முன்னிலை வகித்தார். இளநிலை எழுத்தர் குமார் வரவேற்றார்.கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி (அதிமுக) கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவினரை தோற்கடித்தனர். கூட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சி 7வது வார்டில் அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதை இடத்தில் பேரூராட்சி நில வாடகை கடைகள் இருந்தது. இந்த கடைகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததாக கடைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. பின்பு அந்த இடத்தில் பேரூராட்சி தலைவர் கூட்ட தீர்மானம் இல்லமால் நள்ளிரவில் கம்பி வேலி அமைத்துள்ளார்.

இதனை மன்ற ஒப்புதலுக்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை அதிமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் கதிரவன், பேரூராட்சி அதிமுக உறுப்பினர் அருணா மற்றும் திமுக உறுப்பினர் மல்லிகா, கீர்த்திகாதேவி, முத்துலெட்சுமி, விரச் செல்வி, அப்துல் அஜிஸ், அஜய்ராஜா, மாதவன் உள்ளிட்ட ஏழு பேர் எதிர்த்ததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மற்ற அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதிமுக தலைவர் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக துணை தலைவர் மற்றும் திமுகவினர் சேர்ந்து எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்ற செய்யாமல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தலைஞாயிறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : City Council ,Borough Council ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்