×

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தீ விபத்து நகைகள், பூஜை பொருட்கள் சேதம்

சீர்காழி, அக்.1: சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தீப்பற்றி எரிந்ததில் அம்மன் கழுத்தில் இருந்த 2 தங்க தாலி குண்டுகள் உருகியது. மயிலாடுதுறை மாவட்டம். சீர்காழி, அருகே சட்டநாதபுரம், உப்பனாற்றங்கரையில் மங்கள சாமுண்டீஸ்வரி சமேத கருணாமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். ஆனால் கோவில் முழுமையாக தீப்பிடித்து எரிந்து விட்டது. இதில் அம்மன் கழுத்திலிருந்த 4 தாலி குண்டுகளில் 2 தாலி குண்டுகள் உருகி விட்டது. மேலும் கோயிலிலிருந்த திருவிளக்கு, தாம்பாளம், தீபாராதனை கொத்து உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் ஆன்மீக புத்தகங்கள் சேதமடைந்துள்ளன. இக்கோயிலை  சந்திரசேகர் சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். கோயில் தீப்பற்றி எரிந்ததை அறிந்த இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பக்தர்கள் கோயில் முன்பு திரண்டனர். கோயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா என்பது குறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chamundeshwari Amman temple ,Chattanathpuram ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே சட்டநாதபுரம் சந்தன மாரியம்மன் கோயிலில் காவடி திருவிழா