×

பாளை. சிறையில் முதியவர் திடீர் சாவு

நெல்லை, அக். 1: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் கணபதி (73). போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை. மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த கணபதி ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று மயக்கம் போட்டு அவர் விழுந்தார். உடனே சிறைத்துறை அலுவலர்கள் கணபதியை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Palai ,
× RELATED ₹26.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள...