×

தொடர் மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முடங்கியது

காரைக்கால், செப்.30: காரைக்காலில் தொடர் மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முற்றிலும் முடங்கியது. காரைக்காலில் மின்துறை தனியார் மையம் ஆவதை எதிர்த்தும் மின்துறை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டதை திரும்ப பெறக் கோரியும் மின்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக காலவரையின்றி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காரைக்காலில் கிராம பகுதிகள் மற்றும் காரைக்கால் நகரப்பகுதி ஒரு சில இடங்களில் கடந்த 36 மணி நேரமாக தொடர் மின்வெட்டு நிலை வருகிறது. இதனிடையே காரைக்கால் மதகடி யில் உள்ள மத்திய சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் கடந்த 36 மணி நேரமாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் காரைக்காலில் மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜெனரேட்டர்கள் வைத்து இயக்கினாலும் 8 மணி நேரம் மட்டுமே பொதுமக்களுக்கு சேவை வழங்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் இயங்காமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேராக பி.எஸ்.என்.ல் அலுவலகம் வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : BSNL ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...