×

கேளம்பாக்கத்தில் மெத்தம் பெட்டமைன் பவுடர் வைத்திருந்த வாலிபர் கைது


திருப்போரூர், செப்.30: கோளம்பாக்கத்தில், மெத்தம் பெட்டமைன் பவுடர் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேளம்பாக்கம் பகுதியில் விலையுயர்ந்த போதைப்பொருளான மெத்தம் பெட்டமைன் என்ற போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கேளம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிளாட்ஸன் ஜோஸ் தலைமையிலான போலீசார் கேளம்பாக்கம் அடுத்த தையூர் செங்கண்மால் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர். அவரிடம் அரிய வகை போதைப்பொருளான மெத்தம் பெட்டமைன் என்ற பவுடர் வகையில் 7 கிராம் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்த வகை போதைப்பொருள் 1 கிராம் ₹3,500க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதை பெங்களூரில் இருந்து வாங்கி வந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த குடியிருப்பில் தங்கி இருந்த மணிகண்டன் (29) என்ற வாலிபரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மணிகண்டனின் பெற்றோர் மகாராஷ்டிர மாநிலம் மேற்கு மும்பை பகுதியில் வசித்து வருகிறார்கள் என்றும், ெசாந்த தொழில் தொடங்க போவதாக கூறி மணிகண்டன் கேளம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

Tags : Kelambakkam ,
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!