×

அக்டோபர் 2 மற்றும் 9ம் தேதிகளில் மது கடைகளை மூட உத்தரவு

கோவை, செப்.30: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டலில் செயல்படும் மதுக்கூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அக்டோபர் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி தினம், 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீலாடி நபி  தினங்கள் அன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்