திருப்புவனம், செப்.30: திருப்பாச்சேத்தி அருகே கானூரில் மந்தையம்மன் கோயில் பொங்கல் மற்றும் முளைப்பாரி திருவிழா கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஏராளமான பெண்கள் கும்மியடித்து மந்தையம்மனை வழிபட்டனர். அதனையடுத்து இரவு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கானூர் கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர்.
கானூர் கிராம விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.