பழநி, செப். 30: பழநி பகுதியில் உள்ள அப்பனூத்து, ஆயக்குடி, அமரபூண்டி, குமாரபாளையம் உப மின்நிலையங்களில் இன்று (செப்.30, வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை அய்யம்புள்ளி, வரதமாநதி, புளியமரத்துசெட், ராமநாதநகர், பாலசமுத்திரம், பாலாறு- பொருந்தலாறு, வெட்டுக்கோம்பை, ஆயக்குடி, கணக்கன்பட்டி, பொட்டம்பட்டி, ரூக்குவார்பட்டி, அமரபூண்டி, மிடாப்பாடி, குமாரபாளையம், அப்பனூத்து, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, அப்பிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.