×

எஸ்டிபிஐ மண்டல கூட்டம்

மதுரை, செப். 29: எஸ்டிபிஐ. கட்சியின், மதுரை மண்டல கூட்டம், தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மண்டலத்தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமை வகித்தார். மண்டலச்செயலாளர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார். தெற்கு மாவட்டத்தலைவர் சீமான் சிக்கந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஜனநாயக சக்திகள் மூலம் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க பேரணியில் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும்விதமாக பொதுமக்கள் அனைவரும் ஓரணியில் திரளாக பங்கேற்று, சமூக நல்லிணக்க பேரணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

 மண்டலம்வாரியாக தெருமுனை மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : STBI ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்