×

காலிபணியிடங்களை நிரப்ப கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப். 26: தமிழகம் முழுவதும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேஸ் சிலிண்டர் தொகையை காலம் கடத்தாமல் உடனே வழங்க வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஏற்கனவே காலை சிற்றுண்டி கொடுக்கின்றோம் தனியாருக்கு கொடுப்பதை தவிர்த்திட வேண்டும். பத்து வருடம் பணி முடித்த உதவியாளருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். செல்போன் கொடுத்து நான்கு ஆண்டுகள் முடிந்து பழுதடைந்து உள்ளது. எனவே உடனடியாக  புதிய செல்போன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் குமரி மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் சரஸ்வதி, சிஐடியு மாவட்ட செயலாளர் தங்க மோகன், தலைவர் சிங்காரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் லீடன்ஸ் டோன் மற்றும் மாநில குழு உறுப்பினர் இந்திரா ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், அமுதா, சந்திரகலா, சரோஜினி, குமாரி சுஜரிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anganwadi ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்