×

வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 4 வழிச்சாலையை விரைந்து செயல்படுத்த கோரி வழக்கு

சென்னை, செப். 27: விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில், 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை பணி மந்தகதியில் நடந்து வருகிறது. குறிப்பாக விக்கிரவாண்டி- பின்னலூர் இடையிலான பணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

மாற்றுப்பாதையில் செல்வதால் நேரம் மற்றும் பணம் விரயமாகிறது. எனவே, விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட வேண்டும். இந்த பணிகள் முடிவடையும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய சாலை போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : Thanjavur-Vikravandi road ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...