×

கறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட கால்பந்து போட்டியில் சாதனை

கறம்பக்குடி, செப். 24: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான குறு வட்ட அளவிலான புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை செய்துள்ளனர். தொடர்ந்து புதுக்கோட்டை யில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மாவட்டத்தில் உள்ள 8 குறுவட்ட அளவிலும் முதல் இடம் பிடித்த 8 அணிகள் பங்கேற்று விளையாடினர். இந்த கால்பந்து இறுதி போட்டியில் கறம்பக்குடி ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை குறுவட்ட அணியை வென்று முதல் இடம் பிடித்து மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற மாணவர்களையும் பயிற்சிகள் அளித்த உடற்கல்வி இயக்குனர் கலைச்செல்வன் உடற்கல்வி ஆசிரியர்கள் கருணா மூர்த்தி, மாரிமுத்து மற்றும் அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பொது மக்கள் அனைவரும் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Karambakudy Government School ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...