×

பொன்னமராவதியில் நவீன மின்மயானம் அமைக்க இடம் வழங்கியவருக்கு பாராட்டு

பொன்னமராவதி,செப்.24: பொன்னமராவதியில் நவீன மின் மயானத்திற்கு இடம் வழங்கியவரை புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு பாராட்டினார். பொன்னமராவதியில் தொட்டியம்பட்டி ஊராட்சியின் திருமக்கேனி மயானம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த இடத்தினை நவீன எரிவாயு மயானத்திற்காக இடம் தேர்வு செய்த போது இது தனியார் பட்டாவில் இருந்ததால் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அனைவரும் பயன்படுத்தும் மயானம் பட்டா இடமாக இருந்ததால் தேர்வு செய்ய இயலாத நிலையில் இடத்தின் உரிமையாளர் வலையபட்டியை சேர்ந்த அடைக்கப்ப செட்டியார் மனைவி தேனம்மை ஆச்சியை அணுகி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இடத்தை பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு தானமாக பத்திர பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பு செய்துள்ளனர். இதனையடுத்து இதனையடுத்து தேனம்மை ஆச்சிக்கு கலெக்டர் கவிதாராமு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.  இதில் திட்டஇயக்குனர் கருப்பசாமி, ஆர்டிஓ குழந்தைவேலு, ஒன்றிய ஆணையர் தங்கராஜ், தொட்டியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதா சோலையப்பன், பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Ponnamaravati ,
× RELATED பொன்னமராவதியில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் கடையில் தீ