×

எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி, செப். 24: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடந்தது. எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், அரசு வக்கீல்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : DSP ,SP ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...