×

பாளையில் இளம்பெண் மாயம்

கேடிசி நகர், செப். 24: பாளை மனகாவலம்பிள்ளை நகர் ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் ராஜபிரசாத். இவரது மனைவி இந்துமதி (19). பெருமாள்புரத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். சமீப காலமாக அவர் வேலைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் ராஜபிரசாத் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி கிடந்தது. உடனே இந்துமதியை அக்கம் பக்கத்து வீடுகளில் தேடி உள்ளார். உறவினர்களிடமும் விசாரித்துள்ளார். ஆனால் இந்துமதி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜபிரசாத் பாளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இந்துமதியை தேடி வருகின்றனர்.

Tags : Palai ,
× RELATED நெல்லையில் ஜான்பாண்டியன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு