×

போடி பகுதியில் புகையிலை விற்ற 5 பேர் கைது

போடி, செப். 23:போடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க போடி நகர் போலீசார், கடைகளில் திடீர் சோதனை செய்தனர். இதில், போடி-தேவாரம் சாலையில் உள்ள வனராஜ் (58), போடி பெரியாண்டவர் கோவில் அருகே உள்ள மகுடீஸ்வரன் (57) , போடி காமராஜபாண்டியன் ரோட்டில் உள்ள ஜாகீர் உசேன் (40) ஆகியோரது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் வைத்திருந்தது தெரிந்தது.மேலும், போடி குண்டாலீஸ்வரி கோவில் அருகே உள்ள ஜீவகுமார் (20) என்பவரது கடையில் மதுபாட்டில் வைத்திருந்தது தெரிந்தது. இதனையடுத்து, மேற்கண்ட 5 பேர் மீதும் போடி நகர் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Bodi ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது