×

தூத்துக்குடியில் இன்று புதிய கல்விக்கொள்கை கருத்து கேட்பு கூட்டம்

விளாத்திகுளம், செப். 22:  தூத்துக்குடியில் இன்று(22ம் தேதி) அறிவியல் இயக்கம் சார்பில் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாண்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாகவும், கல்வித்துறையில் சீரிய முறையில் பங்காற்றி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் புதிய கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம், இன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.


இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர் அமைப்புகள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய
ஆலோசனைகள், கருத்துகளை தெரிவிக்கலாம். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்விக் கொள்கை குறித்த விவாதத்தில் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.

Tags : Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!