×

எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் சர்வதேச அமைதி தினம்

நெல்லை, செப். 22: நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமையில்  பேராசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம்தேதி சர்வதேச சமாதான தினம் அனுசரிக்கப்படுகிறது. 24 மணிநேர அகிம்சை மற்றும் போர்நிறுத்தத்தை கடைபிடிப்பதன் மூலம், அமைதியின் இலட்சியங்களை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட நாளாக ஐநா பொதுச்சபை அறிவித்துள்ளது. ஜாதி மதம், இனம் பாராமல் அனைவரும் சமமாக நடத்தப்படும் உலகத்தை உருவாக்குவது இதில் அடங்கும். இது அனைத்து நாடுகளுக்கும் மக்களுக்கும் உள்ளேயும் அமைதியின் இலட்சியங்களை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அமைதி தினம் என்பது நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து என்ன உருவாக்க முடியும் என்பதை ஒரு ஊக்கமளிக்கும் நினைவூட்டல் ஆகும். இதனிடையே, கல்லூரியின் ஏபிஜே அப்துல்கலாம் வளாகத்தின் முன்பு கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சர்வதேச அமைதி தினத்தை கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் கடைபிடித்தனர். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து, பேராசிரியர்கள், மாணவர்கள் அமைதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் சகாரிய காபிரியேல், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்கச் செயலாளர் டேவிட் அய்லிங் செய்திருந்தார்.

Tags : FX ,International Day of Peace ,Engineering ,
× RELATED 3ம் தேதி நடக்கிறது பிஎஸ்ஆர் பொறியியல்...