×

மாணவர்களுக்கு நீதிபதி எச்சரிக்கை; படியுங்கள் கால்நடைகளை கொடுமைப்படுத்தாமல் மேய்ச்சலுக்கு விட்டு பராமரிக்க வேண்டும்: மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

அரியலூர், செப்.22: அரியலூர் மாவட்டத்தில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது அதன் கால்களை கழுத்துடன் இணைத்து கட்டி கொடுமைப்படுத்துவது இல்லாமல் பராமரிக்க வேண்டும் என்றும், மீறினால் விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் கால்நடை வளர்க்கும் விவசாய பெருமக்கள் தங்களது பசுக்கள், எருமைகள் மற்றும் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு அனுப்பும் பட்சத்தில் அவர்கள் மாடு, ஆடுகளின் முன்காலில் கயிறுகட்டி அதனை கழுத்துடன் இணைத்துகட்டி அனுப்பி விடுகிறார்கள்.

இதனால் அந்த கால்நடைகள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகின்றன. மேலும் அவ்வாறு கட்டப்பட்ட கால்நடைகள் போக்குவரத்து சாலைகளை கடக்கும்போது வேகமாக செல்ல முடியாமலும் திரும்ப முடியாமலும் பல விபத்துக்கள் ஏற்பட்டு கால்நடைகளுக்கும், மனித உயிர்களுக்கும் உயிரிழப்பு ஏற்படுவது மட்டுமின்றி காயங்களும் ஏற்படுகின்றன. மேலும் வாகனங்களுக்கும் பெரும் சேதங்களை ஏற்படுத்துகின்றன. பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960 பிரிவு 3ன்படி பிராணிகள் பசி, பிணியின்றி தேவையற்ற துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும்.

இதனை மீறி தெருக்களில் கால்நடைகளை திரிய அனுமதிக்கும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960 பிரிவு 3 மற்றும் பிரிவு 11ல் வரையறை செய்யப்பட்டுள்ளது. பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960 பிரிவு 3ன்படி கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும்போது கால்நடை போக்குவரத்து விதி 2001 விதி 96ன்படி குறைந்தபட்சம் 2 சதுர மீட்டர் இடவசதி மற்றும் குடிநீர் வழங்கிட வேண்டும். எனவே அனைத்து அரியலூர் மாவட்ட கால்நடை வளர்க்கும் விவசாய பெருமக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பும்போது கால்நடைகளை துன்புறுத்தும் வண்ணம் கால்களை கட்டுவது, நடக்க முடியாமல் தடுப்பது, கொடுமைப்படுத்துவது இல்லாமல் பராமரிக்க வேண்டும். அதை மீறினால் விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags : Livestock ,Ariyalur ,
× RELATED தேர்தல் ஆணைய கெடுபிடிகளால் களையிழந்த...