×

419 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

மதுரை, செப். 22: மதுரை விளக்குத்தூண் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் 419 கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஜோராராம் (35), ஷரிஸ் யாதவ் (26)ஐ கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 3 செல்போன்கள், ஒரு டூவீலர், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Gutka ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது