×

கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தில் கிடந்த ஆண் உடல்

கோவில்பட்டி, செப். 21: கோவில்பட்டியில் விவசாய நிலத்தில் ஆண் உடல் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவில்பட்டியை அடுத்த முடுக்கலாங்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான உழவு செய்யப்பட்ட நிலத்தில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. இதுகுறித்து விஏஓ கிருத்திக்பாபு, கொப்பம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

சுமார் 35 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து கொப்பம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை