×

உசிலை கல்வி மாவட்டம் மீண்டும் வேண்டும் ஆசிரியர்கள் சங்கங்கள் மனு

மதுரை, செப். 21: மதுரை மாவட்டத்தில் நீக்கம் செய்யப்பட்ட உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் முதன்மை கல்வி அலுவலக்கத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர்கள் சங்கங்களின் மதுரை மாவட்ட செயலாளர்கள், சந்திரன் (தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம்). கார்த்திகேயன் (தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்), சீனிவாசன் (தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ராஜரத்தினம் (தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்), சுரேஷ் (இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் அகில இந்திய செயலாளர்) ஆகியோர் நேற்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் (உயர்நிலைப்பள்ளிகள்) செந்தில்குமாரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், ‘அரசாணை எண் 151ன்படி, 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியமிக்க உசிலம்பட்டி கல்வி மாவட்டம் கலைக்கப்

Tags : Teachers Unions ,Usilai Education District ,
× RELATED அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4%...