×

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 526 மனுக்கள் குவிந்தன

திருச்சி, செப். 20: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள்,

அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 526 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிகழ்வில், டிஆர்ஓ அபிராமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அம்பிகாபதி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Trichy Collector ,
× RELATED சமயபுரம் மாரியம்மன் கோயில்...