×

4 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருப்பூர், செப், 20: திருப்பூர் வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஆத்துப்பாளையம், பொதுக்கழிப்பிடம் அருகே சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்,.அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

போலீசார் விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்ணுசங்கர் தரியா (25) என்பதும், திருப்பூர் பரமசிவம் பாளையம் பகுதியில் தங்கி, ஆத்துப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து, வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிஷ்ணுசங்கர் தரியாவை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 4,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா