×

கலெக்டர் அலுவலக குறைதீர் முகாமில் 498 மனுக்கள் அளித்த மக்கள் உடனடியாக தீர்வுகாண கலெக்டர் அறிவுறுத்தல்

மதுரை, செப்.20: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பொமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 37 மனுக்களும், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக்கோரி 17, சாதிச்சான்றுகள் கேட்டு 4, நிலம் தொடர்பாக 41, குடும்ப அட்டை தொடர்பாக 8, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பாக 78 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், வேலைவாய்ப்பு கோரி 49 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி (சாலை, தெருவிளக்கு, தண்ணீர் குழாய், பேருந்து வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள்) 16, புகார் தொடர்பாக 45, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 7, திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண்குழந்தைகள் திட்டம் மற்றும் சலவைப்பெட்டி தொடர்பாக 15, பென்சன் நிலுவைத்தொகை, ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பாக 2, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், ராஜாக்கூர் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடர்பாக 94 மற்றும் இதர மனுக்கள் 85 என மொத்தம் 498 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சவுந்தர்யா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...