×

ஒட்டன்சத்திரத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா, மதுபாட்டில் பதுக்கிய 3 பேர் கைது

ஒட்டன்சத்திரம், செப். 20:  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்கள் மற்றும் போலி மதுபானம் விற்பது தொடர்பாக மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் வி.ஆர் பாஸ்கரன் தீவிர நடவடிக்கையால் மாவட்ட முழுவதும் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே காரில் வந்த ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (50), மோசஸ் பெனினா(43) திண்டுக்கல் பகுதி சேர்ந்த சையது முகமது (26) உள்ளிட்ட மூவரையும் நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் காரில் சட்ட விரோதமாக குட்கா புகையிலை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பெங்களூர் பகுதியில் இருந்து 1500 போலி மது பாட்டில்கள் விற்பனைக்காக கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

Tags : Gutka ,Otanchatra ,
× RELATED போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு...