×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருச்சி, செப்.13: தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம், திருச்சி மாவட்ட மக்களிடம் கருத்து கேட்காமல் மின்வாரிய கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜங்ஷன் பகுதி செயலாளர் ரபீக் அகமது தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரேணுகா, வள்ளி, கணேசன், அப்துல் ஹையும், சேக் மொய்தீன், வேதநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Marxist ,
× RELATED சிறப்பு குழு ஆளுநரை தேர்வு செய்யும்:...