×

வேதாரண்யம் அருகே விவசாயி மர்ம சாவு போலீசார் விசாரணை

வேதாரண்யம்,செப்.13: வேதாரண்யம் அடுத்த தகட்டூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன் மகன் மகாலிங்கம் (50) இவரது மனைவி ராஜேஸ்வரி (45) இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகாலிங்கம் ஆயக்காரன்புலம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆயக்காரன்புலம் பாப்பிரெட்டி குத்தகை பகுதியில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக வாய்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். இதில் தகட்டூர் பகுதி சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரியவந்தது. மேலும் இறந்த மகாலிங்கத்தின் உடலில் அருகே மருந்து பாட்டில் ஒன்று இருந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து வாய்மேடு போலீசார் மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கம் எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா என்று அவரது மர்ம சாவு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Marma ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்