×

வைக்கோல் பிரித்தெடுக்கும் பெண் தொழிலாளர்கள் ஆயக்காரன்புலம் கூட்டுறவு வங்கியில் மாடுகள் வாங்க கடன் உதவித்தொகை

வேதாரண்யம்,செப்.13: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் முன்னிலை வகித்தார்.

கூட்டுறவு சங்க செயலாளர் வாஞ்சிநாதன் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கருப்பம்புலம் ஊராட்சியில் 50 நபர்களுக்கு 165 மாடுகள் வாங்க ரூபாய் 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடனாக பால் உற்பத்தியாளர்கள் சங்க பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags : Ayakkaranpulam Co ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு