ஈரோடு,செப்.13: பெருந்துறை அடுத்துள்ள மேட்டுபுதூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 5ம் தேதி பள்ளிக்கு சென்ற அவர் மீண்டும் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பெருந்துறை போலீசில் இது குறித்து புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,சேலம் மாவட்டம், கொங்கனவள்ளி, உதயத்தூர், நடுத்தெருவை சேர்ந்த ரங்கநாதன்(26) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 11 மாதங்களாக சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி விஜயமங்கலம் வந்த ரங்கநாதன், சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருச்சியில் உள்ள வெங்கனூர் ஈஸ்வரன் கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சேலம் சென்ற போலீசார் அங்கு வாலிபர் ரங்கநாதனை தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் பதுங்கி இருந்த ரங்கநாதனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டனர்.