தூத்துக்குடி, செப்.10: தூத்துக்குடியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் எஸ்ஐ குமரேசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த இருவரை மடக்க முயன்ற போது ஒருவர் தப்பியோடினார். மற்றொருவர் சிக்கினார். போலீசார் நடத்திய விசாரணையில் மாதவநாயர் காலனியை சேர்ந்த தொம்மை என்ற இசக்கிமுத்து(25) மற்றும் 19 வயது வாலிபர் என தெரியவந்தது. இதில் 19 வயது வாலிபர் மட்டும் போலீசில் சிக்கினார். அவரிடம் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.