×

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை ஊர் புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

தஞ்சாவூர், செப். 10: ஊர் புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தஞ்சாவூரில் நடந்த மாற்று திறனாளிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு பொது நூலகத்துறை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் பெருமாள் வரவேற்றார். ஜெயக்குமார், ஜோசப், ராஜதுரை, சண்முகநாதன், பச்சமுத்து, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேஷ் குமார், கதிரேசன், பழனி, தேவி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின் மாநாட்டில் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊர் புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து நூல்களிலும் மின் வசதி, மற்றும் கழிப்பிட வசதி, செய்து தர வேண்டும், மாற்று திறனாளி பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வாகன படி ரூ.2,500 லிருந்து ரூ. 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில இணைச் செயலாளர் சிவாஜி நன்றி கூறினார்.

Tags : Dinesh Ponraj Oliver ,
× RELATED சார் பதிவாளர்கள் அலுவலகங்களில்...