×

உயர்நீதிமன்ற வக்கீல் கொலை ஒரத்தநாடு வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

ஒரத்தநாடு, செப்.10: வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஒரத்தநாடு நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வழக்கறிஞர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கும்பகோணம் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் சாமிநாதனை கடந்த 7ம் தேதி மர்ம நபர்கள் அரியலூர் மாவட்டம் தாபமோ அணைகுடம் என்ற இடத்தில் சமூக விரோதிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து ஒரத்தநாடு நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஒரத்தநாடு சங்க தலைவர் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் ரவி, இணைச் செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். இதில் ஒரத்தநாடு அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Tags : Orathanadu ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி